×

ஓபிஎஸுக்கு தியானம் இருக்க ஐடியா கொடுத்ததே நான் தான்… குருமூர்த்தி பரபரப்பு பேச்சு!

ரஜினி அரசியலுக்கு வருவது அதிலும் குறிப்பாக பிஜேபியுடன் இணைவது என்பது மட்டுமே குருமூர்த்தியின் கனவாக உள்ளது. துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி பாஜகவுக்கு ஆதரவு தரும் வகையில் பல சூசகமான விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். ரஜினி அரசியலுக்கு வருவது அதிலும் குறிப்பாக பிஜேபியுடன் இணைவது என்பது மட்டுமே குருமூர்த்தியின் கனவாக உள்ளது. அந்த வகையில் திருச்சியில் துக்ளக் பத்திரிகை பொன்விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட குருமூர்த்தி, அதிமுக மீண்டும் இணைந்ததில் என் பங்கும் உள்ளது.
 

ரஜினி  அரசியலுக்கு வருவது அதிலும் குறிப்பாக பிஜேபியுடன் இணைவது என்பது மட்டுமே குருமூர்த்தியின் கனவாக உள்ளது.

 துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி பாஜகவுக்கு ஆதரவு தரும் வகையில்  பல  சூசகமான விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். ரஜினி  அரசியலுக்கு வருவது அதிலும் குறிப்பாக பிஜேபியுடன் இணைவது என்பது மட்டுமே குருமூர்த்தியின் கனவாக உள்ளது.

அந்த வகையில் திருச்சியில்  துக்ளக் பத்திரிகை பொன்விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட குருமூர்த்தி, அதிமுக மீண்டும் இணைந்ததில் என் பங்கும் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான் தான் ஓபிஎஸை மெரினாவில் தியானம் இருக்க சொன்னேன். அதன்பிறகு தான் கட்சி இணைந்தது. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும். அப்போது தான் தமிழகத்தில் மாற்றம்  ஏற்படும் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், மகாராஷ்டிரா அரசியலில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைந்தால்  நாட்டிற்கு கேடுதான். அதனால் பாஜகவை ஆதரிக்கிறேன்’ என்றார்.