×

ஓட்டுப்போடலெல்ல14 லட்சத்த திருப்பி குடுங்க,.. மிரட்டும் எம்.எல்.ஏ

அதிமுக-வின் மணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் அதிரடிகளுக்குப் பேர்போனவர்.தேர்தலில் வென்ற உடனே குலதெய்வம் சட்டிக்கருப்புக்கு 25 கிடாக்கள்,100 கோழிகள் வெட்டி அவர் வைத்த விருந்தை உள்ளூர் ரத்தத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் இப்போதும் மறக்கவில்லை. என்ன, சட்டிக்கருப்புதான் பரமேஸ்வரிக்கு மந்திரிபதவி வாங்கித்தரவில்லை!. அதிமுக-வின் மணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் அதிரடிகளுக்குப் பேர்போனவர்.தேர்தலில் வென்ற உடனே குலதெய்வம் சட்டிக்கருப்புக்கு 25 கிடாக்கள்,100 கோழிகள் வெட்டி அவர் வைத்த விருந்தை உள்ளூர் ரத்தத்தின் ரத்தத்தின் ரத்தங்கள்
 

அதிமுக-வின் மணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் அதிரடிகளுக்குப் பேர்போனவர்.தேர்தலில் வென்ற உடனே குலதெய்வம் சட்டிக்கருப்புக்கு 25 கிடாக்கள்,100 கோழிகள் வெட்டி அவர் வைத்த விருந்தை உள்ளூர் ரத்தத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் இப்போதும் மறக்கவில்லை. என்ன, சட்டிக்கருப்புதான் பரமேஸ்வரிக்கு மந்திரிபதவி வாங்கித்தரவில்லை!.

அதிமுக-வின் மணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் அதிரடிகளுக்குப் பேர்போனவர்.தேர்தலில் வென்ற உடனே குலதெய்வம் சட்டிக்கருப்புக்கு 25 கிடாக்கள்,100 கோழிகள் வெட்டி அவர் வைத்த விருந்தை உள்ளூர் ரத்தத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் இப்போதும் மறக்கவில்லை. என்ன, சட்டிக்கருப்புதான் பரமேஸ்வரிக்கு மந்திரிபதவி வாங்கித்தரவில்லை!.

அரசு காட்ராக்ட்டில் தனக்கு 30 சதவீதம் கமிஷன் கரெக்ட்டாக வந்துவிட வேண்டும் என்று இவர் போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் ஆடியோ இன்னும் பிரபலம்.
கடந்த ஃபிப்ரவரியில் இவருடைய தத்தநல்லூர் வீட்டில் கொள்ளை முயற்சி ஒன்று நடந்தது.அதுபற்றிகூட உள்ளூரில் பல கதைகள் உண்டு.

இந்த நிலையில் மணச்சநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பரமேஸ்வரியின் கணவர் முருகன் போட்டியிட்டார்.அப்போதே அந்த ஊராட்சிக்கு உட்பட்ட பாலையூர் ஒன்றியம் வலையூர் ஊராட்சித்தலைவர் பதவியை முருகன் ஏலத்தில் எடுத்துவிட்டார் என்ற புகார் கிளம்பியது.போலீஸும் விசாரித்து வந்தது.ஆனால் தேர்தலில் முருகன் தோற்று திமுகவைச் சேர்ந்த ஸ்ரீதர் வெற்றிபெற்று விட்டார். இந்த நிலையில் வலையூர் ஒன்றியத்தைச் சேர்ந்த இருவர் பேசும் ஆடியோ ஒன்று வலைத்தளத்தில் பகிரப்பட்டு எம்.எல்.ஏவை சிக்கலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

அதில் பேசுகிற ஒருவர்,’ எல்லோரும் திமுகவுக்கு வளைத்து வளைத்து ஓட்டுப் போட்டு விட்டதால் எம்.எல்.ஏவும் ஆவர் கணவரும் பணத்தை திருப்பித்தரும்படி கேட்கிறார்கள்.பரமேஸ்வரி ஊருக்கு வந்து கொடுத்த பணத்தை ஒழுங்காகத் திருப்பித்தர வேண்டும் என்று மிரட்டினார்’ என்று பேசுகிறார்கள்.

இதற்காக ஊர்கூட்டம் போட்டு பணத்தை திருப்பித்தருவது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அந்தகூட்டத்துக்கு பரமேஸ்வரியும் வருகிறார் என்றும் அந்த இருவரும் பேசுகிறார்கள். இது அந்தப் பகுதியில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.