×

ஒரு நாளைக்கு ரூ.80 கோடி லாஸ்… ஏப். 14 வரை டாஸ்மாக் கிடையாது! – அமைச்சர் தங்கமணி பேட்டி

தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு வாரத்துக்குத்தான் ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்ற வகையில் குடிமகன்கள் தங்களை தயார் செய்துகொண்டனர். ஆனால், 24ம் தேதி இரவு பேசிய பிரதமர் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவித்தார். வருகிற 14ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் திட்டம் தமிழக அரசுக்கு இல்லை என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு
 

தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு வாரத்துக்குத்தான் ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்ற வகையில் குடிமகன்கள் தங்களை தயார் செய்துகொண்டனர். ஆனால், 24ம் தேதி இரவு பேசிய பிரதமர் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவித்தார்.

வருகிற 14ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் திட்டம் தமிழக அரசுக்கு இல்லை என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு வாரத்துக்குத்தான் ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்ற வகையில் குடிமகன்கள் தங்களை தயார் செய்துகொண்டனர். ஆனால், 24ம் தேதி இரவு பேசிய பிரதமர் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவித்தார். இதனால் குடிமகன்கள் திக்குமுக்காடிப் போயினர்.

மோடி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தமிழகத்தில் ஊரடங்கு தொடங்கிவிட்டது. அதனால், ஏப்ரல் 14ம் தேதி வரைக்கும் எதிர்கொள்ள டாஸ்மாக் சரக்கு வாங்க முடியாமல் போயினர் தமிழக குடிமக்கள். மது கிடைக்காததால் தற்கொலை, வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. மதுவுக்கு பதில் ரசாயனம் குடித்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் தங்கமணி திருச்செங்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் எண்ணம் இல்லை. மாற்று போதை நாடுவோருக்கு கவுன்சலிங் வழக்க மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு ரூ.80 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டாலும் ஊரடங்கு முடிந்த பிறகே கடைகள் திறக்கப்படும்” என்றார்.