×

எல்லா பிரச்னைகளுக்கும் சசிகலாதான் காரணம்: திவாகரன் குற்றச்சாட்டு

அதிமுகவில் நடக்கும் எல்லா பிரச்னைகளுக்கும் சசிகலாதான் காரணம் என திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை: அதிமுகவில் நடக்கும் எல்லா பிரச்னைகளுக்கும் சசிகலாதான் காரணம் என திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார். சசிகலாவின் சகோதரர் திவாகரன் மதுரை கோரிப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுகவில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் சசிகலாதான் காரணம். அவர் எடுத்த தவறான முடிவுகள்தான் முதற்காரணம். டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக்கியது சசிகலா செய்த முதல் தவறு. அதிமுகவும் தினகரன் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்.
 

அதிமுகவில் நடக்கும் எல்லா பிரச்னைகளுக்கும் சசிகலாதான் காரணம் என திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை: அதிமுகவில் நடக்கும் எல்லா பிரச்னைகளுக்கும் சசிகலாதான் காரணம் என திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சசிகலாவின் சகோதரர் திவாகரன் மதுரை கோரிப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுகவில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் சசிகலாதான் காரணம். அவர் எடுத்த தவறான முடிவுகள்தான் முதற்காரணம். டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக்கியது சசிகலா செய்த முதல் தவறு.

அதிமுகவும் தினகரன் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார். நானும்தான் அரசியல் செய்கிறேன் ஆனால் அதிமுகவுகு இடையூறாக இருந்ததில்லை. அதிமுகவை கைப்பற்றுவதுதான் தினகரனின் எண்ணமாக இருக்கிறது. 18 எம்.எல்.ஏக்களை அதிமுக திரும்ப அழைத்திருப்பது மகிழ்ச்சியான செயல் என்றார். மேலும் அவர் பேசுகையில், மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தக்கூடாது. தேர்தல் வந்தால் சந்திக்க வேண்டியதுதானே? என கேள்வியும் எழுப்பினார்.