×

எனக்கு தங்க இறக்கைகள் வளர்ந்து நான் பறந்து விடுவேன் என சிலர் நம்புவதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்- ப.சிதம்பரம்

எனக்கு தங்க இறக்கைகள் வளர்ந்து நான் பறந்து விடுவேன் என சிலர் நம்புவதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் என திஹார் சிறையில் இருக்கும் முன்னள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ப.சிதம்பரம் சிறையில் இருந்தபோதும், அவரது டிவிட்டர் கணக்கை அவர் சார்பாக அவரது குடும்பத்தினர் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்துள்ளனர். அவர் சார்பாக கருத்துக்களை
 

எனக்கு தங்க இறக்கைகள் வளர்ந்து நான் பறந்து விடுவேன் என சிலர் நம்புவதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் என திஹார் சிறையில் இருக்கும் முன்னள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ப.சிதம்பரம் சிறையில் இருந்தபோதும், அவரது டிவிட்டர் கணக்கை அவர் சார்பாக அவரது குடும்பத்தினர் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்துள்ளனர். அவர் சார்பாக கருத்துக்களை அவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ப.சிதம்பரம் டிவிட்டரில் அவரது குடும்பத்தினர் அவர் சார்பாக ஒரு தகவலை பதிவு செய்து இருந்தனர். அதில், சிலரின் கூற்றுப்படி எனக்கு தங்க இறக்கைகள் வளர்ந்து நிலவுக்கு பறந்து விடுவேன் என நம்புவதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நிலவில் பத்திரமாக தரை இறங்குவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என பதிவு செய்யப்பட்டு இருந்தது.

கடந்த வியாழக்கிழமையன்று டெல்லி நீதிமன்றத்தில், தனக்கு சிறையில் தலையணை அல்லது உட்கார சேர் கூட இல்லாதால் முதுகு வலி ஏற்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் கூறினார். ஆனால் இது சிறு பிரச்னை என்று அரசு தரப்பில் கூறியதால், சிதம்பரத்தின் கோரிக்கையை தள்ளுபடி செய்ததுடன், அவரது காவலை அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்றம் நீடித்தது. தன்னை ஜாமீனில் வெளியிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைதான் ப.சிதம்பரம் கிண்டல் செய்து டிவிட் பதிவு செய்துள்ளார் என தெரிகிறது.