×

எடப்பாடியை தூக்கினால் தான் அந்தப்பதவியை ஏற்பேன்… பொறி வைத்து காத்திருக்கும் ஓ.பி.எஸ்..!

அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக இருப்பதை காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14நாட்களுக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குபயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் வெளிநாட்டு பயணத்தின்போது, தமிழகத்துக்கு யார் பொறுப்பு முதல்வராகநியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து தனக்கு நெருக்கமான அமைச்சர் வேலுமணியிடம் ரகசியமாக சில பொறுப்புகளை கொடுத்துள்ளதாகவும் அதனை கண்காணிக்க சில ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு சிலர் ஓபிஎஸ்ஸிடம் பொறுப்பை கொடுத்து விட்டு செல்லலாம்
 

அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக இருப்பதை காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14நாட்களுக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குபயணம் மேற்கொண்டுள்ளார்.

அவரின் வெளிநாட்டு பயணத்தின்போது, தமிழகத்துக்கு யார் பொறுப்பு முதல்வராகநியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து தனக்கு நெருக்கமான அமைச்சர் வேலுமணியிடம் ரகசியமாக சில பொறுப்புகளை கொடுத்துள்ளதாகவும் அதனை கண்காணிக்க சில ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஒரு சிலர் ஓபிஎஸ்ஸிடம் பொறுப்பை கொடுத்து விட்டு செல்லலாம் என்று எடப்பாடி தரப்புக்கு தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விஷயத்தை அறிந்த ஓபிஎஸ் எனக்கு பொறுப்பு முதல்வர் பதவி எல்லாம் தேவை இல்லை. நான் ஏற்கெனவே இரு முறை முதல்வராக இருந்தவன் என்று தனக்கு நெருங்கிய நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார்.

இபிஎஸ் தரப்பு பொறுப்பு கொடுக்க நினைத்தாலும் அதை ஏற்கும் நிலையில் ஓபிஎஸ் இல்லை என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ’’இப்போ எப்படி இருக்கிறேனோ, அப்படியே இருந்துட்டு போகிறேன். என்கிட்ட யாரும் வந்து இதை பற்றிபேச வேண்டாம்’’  என்று பன்னீர் கடிந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இது, அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக இருப்பதை காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.