×

ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின் தான்: அதிமுக அமைச்சர் கடும் தாக்கு!

ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை: ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின் தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அஇஅதிமுக- வின் 47ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களுடன் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து
 

ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான்  என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை: ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின் தான்  என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அஇஅதிமுக- வின்  47ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களுடன் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியை ஊழல் ஆட்சி என்கிறார். ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான். உலகத்திலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான். சர்க்காரியா கமி‌ஷனை மறந்து விட்டு அவர் பேசக்கூடாது. எனவே மக்கள்தான் இறுதி எஜமானார்கள். அடுத்து வரும் தேர்தல்களிலும் நாங்கள்தான் ஜெயிப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.