இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் நாளை பதவியேற்பு..!
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 21 ஆம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 21 ஆம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. நாங்குநேரியில் அதிமுக சார்பாக ரெட்டியார் பட்டி வெ. நாராயணனும், விக்கிரவாண்டியில் அதிமுக சார்பாக முத்தமிழ் செல்வனும் போட்டியிட்டனர். கடந்த 24 ஆம் தேதி, இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்றது. அதில், இரு தொகுதியிலும் அதிமுக ஆயிரக் கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர்.
அதனையடுத்து, நாளை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏக்களாக நாராயணனும் முத்தமிழ் செல்வனும் பதவியேற்கின்றனர். மேலும், சபா நாயகர் தனபால் இருவருக்கும் பதவி பிராமணம் செய்து வைக்கவுள்ளார்.