×

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் எம்.எல்.ஏக்களாக பதவியேற்பு…!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெ. நாராயணனும் முத்தமிழ் செல்வனும் ஆயிரக் கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெ. நாராயணனும் முத்தமிழ் செல்வனும் ஆயிரக் கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். தேர்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் நவம்பர் 1 (இன்று) பதவியேற்பார்கள் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, இன்று காலை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை
 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெ. நாராயணனும் முத்தமிழ் செல்வனும் ஆயிரக் கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெ. நாராயணனும் முத்தமிழ் செல்வனும் ஆயிரக் கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். தேர்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் நவம்பர் 1 (இன்று) பதவியேற்பார்கள் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன் படி, இன்று காலை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏக்களாக உறுதிமொழி ஏற்றதற்குப் பின்னர், நாராயணனும் முத்தமிழ் செல்வனும் பதவியேற்றனர். சபா நாயகர் தனபால் இருவருக்கும் பதவி பிராமணம் செய்து வைத்தார். 

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை , அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, காமராஜ், தங்கமணி,வெல்லமண்டி நடராஜன்,வளர்மதி, நிலோபர் கபில், மற்றும் ஏராளமான அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.