×

ஆர்டிஐ திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு ஆபத்தாகி விடும்; டிடிவி தினகரன் எச்சரிக்கை!

ஆர்டிஐ திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆர்டிஐ திருத்த மசோதா மூலம் அதிகாரங்களை ஒற்றைப்புள்ளியில் குவிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகி விடும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பொது மக்கள் தகவல் அறிய கொண்டுவரப்பட்ட சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ). கடந்த 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மத்திய தகவல்
 

ஆர்டிஐ திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்கு  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆர்டிஐ திருத்த மசோதா மூலம் அதிகாரங்களை ஒற்றைப்புள்ளியில் குவிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகி விடும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  தெரிவித்துள்ளார். 

பொது மக்கள் தகவல் அறிய கொண்டுவரப்பட்ட சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ). கடந்த 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட  இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம், ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாகத் திருத்தம் கொண்டுவருவதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதையடுத்து ஆர்டிஐ திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்கு  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனையடுத்து இந்த சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்படவுள்ளது. 

இருப்பினும் மக்களவையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மசோதா மாநிலங்களவையில் கொண்டு வருவது கடினமான ஒன்று. காரணம் மத்திய அரசிற்கு போதிய பலம் இல்லை. 

இந்நிலையில் ஆர்டிஐ திருத்த மசோதா குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை விடுத்துள்ளார். அதில், ‘ அரசு நிர்வாகத்தில் நடப்பவற்றைப் பொதுமக்களும் தெரிந்து கொள்ள உதவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்து அதனை நீர்த்துப் போகச் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. 

ஜனநாயக நாட்டில் சாதாரண குடிமகனுக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அரசு நிர்வாகத்திற்கும் சாமான்யர்களுக்கும்இணைப்புப் பாலமாக, ஆட்சியாளர்கள் தங்களது தவறுகளைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பாக ஆர்.டி.ஐ. சட்டம் திகழ்ந்தது. ஆனால், இச்சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தேசிய தகவல் ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக முழுமையாகச் செயல்படாத நிலையில் இருந்தது. தற்போது அதனை முற்றிலுமாக செயலிழக்க செய்யும் வகையில் மத்திய அரசுஆர்.டி.ஐ.சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்து மக்களவையில்
நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம் இந்திய தேர்தல் ஆணையர், ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோருக்கு இணையாக தேசிய தகவல் ஆணையருக்கு இருந்த தகுதியும் அதிகாரமும் பறிக்கப்பட்டுள்ளன. தன்னாட்சி பெற்ற அமைப்பான தேசிய தகவல் ஆணையம் தனது வலிமையை முற்றிலுமாக இழக்கிறது. மேலும் தேசிய தகவல் ஆணையர், மாநில தகவல் ஆணையர்கள் ஆகியோரின் ஊதியங்களையும் இனி மத்திய அரசுதான் நிர்ணயிக்கும் என்கிற திருத்தத்தின் மூலம் தகவல் ஆணையத்தை மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஓர் அமைப்பாக மாற்ற முயற்சிக்கிறது. மக்களவையில் தங்களுக்குள்ள பெரும்பான்மை பலத்தை வைத்து மத்திய அரசு இதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது. 

அரசியல் சாசனத்தைத் தூக்கிப்பிடித்து காப்பாற்றிக் கொண்டிருக்கிற தன்னாட்சி அமைப்புகளை எல்லாம் இப்படி வீழ்த்தி, மத்திய அரசு தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவது ஜனநாயகத்திற்கு பேராபத்தாக முடித்துவிடும். அதிகாரங்கள் மொத்தமும் ஒற்றைப்புள்ளியில் குவிவது நாட்டிற்கு, அதன் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்து,
நிறைவேற்றவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ 

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.