×

அவசர சட்டம் ஆளுங்கட்சியின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது : தொல். திருமாவளவன் அறிக்கை !

நடப்பாண்டு இறுதிக்குள் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்த இந்த அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று
 

நடப்பாண்டு இறுதிக்குள் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

நடப்பாண்டு இறுதிக்குள் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு பிறப்பித்த இந்த அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மறைமுக தேர்தலுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், ” தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது அவசர சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளுக்கான தலைவர் பொறுப்புகளுக்கு நேரடித் தேர்வு நடத்துவதற்குப் பதிலாக கவுன்சிலர்கள் மூலம் மறைமுகத் தேர்தல் நடத்தும் வகையில் இந்த அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இது ஆளும் கட்சியின் தடுமாற்றத்தையும் அச்சத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. மேலும், ஆளுங்கட்சி என்கிற முறையில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கும் ஆள்கடத்தல் உள்ளிட்ட  குதிரை பேர நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் வழிவகுக்கும்.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த அவசர சட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன் இதனை திரும்பப்பெற வேண்டுமென்றும் மக்களே நேரடியாக வாக்களித்து நகர அமைப்புகளுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.