×

அய்யய்யோ அதுவும் போச்சா..? சுக்கு நூறாய் நொறுக்கிய டி.டி.வி.தினகரன்..!

2 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியிடப்போவது இல்லை என அறிவித்து விட்டார். இதனால் அவரது கட்சி நிர்வாகிகள் நொறுங்கி விட்டனர். நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளதால் அரசியல் கட்சியினர் அனைவரது பார்வையும் அந்தத் தொகுதி மீது பதிந்துள்ளது. வழக்கமாக காமராஜர் பிறந்த நாள் விழா தென் மாவட்டங்களில் களைகட்டும். இந்த முறை இடைத்தேர்தலை மனதில் வைத்து அதிமுகவினர் களக்காட்டில் காமராஜர் சிலை இருப்பதால் அங்கு மாவட்ட செயலாளர் தலைமையில் மாலை அணிவிக்க திட்டமிட்டனர். இந்தத் தகவல்
 

2 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியிடப்போவது இல்லை என அறிவித்து விட்டார். இதனால் அவரது கட்சி நிர்வாகிகள் நொறுங்கி விட்டனர்.

நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளதால் அரசியல் கட்சியினர் அனைவரது பார்வையும் அந்தத் தொகுதி மீது பதிந்துள்ளது. 

வழக்கமாக காமராஜர் பிறந்த நாள் விழா தென் மாவட்டங்களில் களைகட்டும். இந்த முறை இடைத்தேர்தலை மனதில் வைத்து அதிமுகவினர் களக்காட்டில் காமராஜர் சிலை இருப்பதால் அங்கு மாவட்ட செயலாளர் தலைமையில் மாலை அணிவிக்க திட்டமிட்டனர்.

இந்தத் தகவல் டி.டி.வி.தினகரன்  தரப்பு காதில் விழ அவர்களும் உடனே களக்காடு காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க படையெடுத்து வந்து விட்டனர். எப்போதும் மாவட்ட தலைநகரில் மட்டுமே மாலை அணிவிக்கும் மாவட்ட செயலாளர்கள் இந்த முறை கிராம பகுதிக்கு கார்களில் படையெடுத்து வந்ததால் இரண்டு கட்சியினருமே குஷியாகி விட்டனர்.

எல்லாம் வருகிற நாங்குநேரி இடைத்தேர்தலை மனதில் வைத்துதான் என கட்சிக்காரர்கள் குஷியாக பேசிக்கொண்டனர். ஆனால் அமமுக தரப்பு நிர்வாகிகள் மாலை அணிவித்துச் சென்ற சிறிது நேரத்தில் டி.டி.வி.தினகரன்,  2 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியிடப்போவது இல்லை என அறிவித்து விட்டார். இதனால் அவரது கட்சி நிர்வாகிகள் நொறுங்கி விட்டனர். சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி இருக்கிறார்கள்.