×

அமைச்சர் ஜெயக்குமாரைப் பற்றி தவறாகப் பேசியதால் திமுக எம்.பி தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு !

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் அடுக்கடுக்காக குற்றங்கள் அம்பலமாகி வருகிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் அடுக்கடுக்காக குற்றங்கள் அம்பலமாகி வருகிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய திமுக எம்.பி தயாநிதிமாறன், “அமைச்சர் ஜெயகுமாருக்குத் தெரியாமல் எந்த முறைகேடும் நடந்திருக்காது. அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும். எத்தனையோ மாணவர்கள் அரசாங்க உத்தியோக கனவுடன் தேர்வு எழுதி வரும் நிலையில்,
 

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் அடுக்கடுக்காக குற்றங்கள் அம்பலமாகி வருகிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் அடுக்கடுக்காக குற்றங்கள் அம்பலமாகி வருகிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய திமுக எம்.பி தயாநிதிமாறன், “அமைச்சர் ஜெயகுமாருக்குத் தெரியாமல் எந்த முறைகேடும் நடந்திருக்காது. அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும். எத்தனையோ மாணவர்கள் அரசாங்க உத்தியோக கனவுடன் தேர்வு எழுதி வரும் நிலையில், அரசு அதனைக் கேலிக்கூத்தாக்கி வருகிறது” என்று கூறினார். 

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “அரசியலில் ஆதாயம் பெறுவதற்காகத் தேவையில்லாத குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான். அதனால், தயாநிதி மாறன் நீதிமன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் அவர் மீது வழக்குத் தொடர தமிழக அரசு ஒப்புதல் அளித்ததன் பேரில், தயாநிதி மாறன் மீது வழக்குத்தொடரப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தயாநிதி மாறன் அவதூறாகப் பேசி குற்றம் செய்துள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாருக்கு டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகப் பேசிய குற்றத்தின் காரணமாக தயாநிதி மாறன் மீது தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அந்த மனுவில் ஆதாரம் இல்லாமல் உண்மைக்குப் புறம்பாக அவர் பேசியதால் உடனே நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.