×

அதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்செல்வன்… தவிடு பொடியாகும் டி.டி.வி.தினரகன் கூடாரம்..!

’செந்தில்பாலாஜி, தி.மு.க.,வில் இணைந்தது, அவரது புத்திசாலித்தனம்’ எனக் கூறியிருந்தார். அதன் பிறகும் தங்க தமிழ்செல்வன் சும்மாயிருப்பாரா..? டி.டி.வி.தினகரனை நம்பி வந்து எம்.எல்.ஏக்கள் பதவியை இழந்தது மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் நடுத்தெருவுக்கு வந்து விட்டதாக கருதும் அமமுக நிர்வாகிகள் இப்போது சோகத்தில் வெதும்பித் தவிக்கிறார்கள். அடுத்து தமிழகத்தில் ராஜ்ஜியம் நடத்த்ப்போகிறோம் என எதிர்பார்த்திருந்த அமமுகவுக்கு பூஜ்ஜியம் மட்டுமே கிடைத்திருப்பதால் இனி எதிர்காலம் என்னவாகுமோ என அரண்டு போய்க்கிடக்கிறார்கள் அக்கட்சியினர். இதனால் பலரும் அதிமுக – திமுகவில் இணைய
 

’செந்தில்பாலாஜி, தி.மு.க.,வில் இணைந்தது, அவரது புத்திசாலித்தனம்’ எனக் கூறியிருந்தார். அதன் பிறகும் தங்க தமிழ்செல்வன் சும்மாயிருப்பாரா..?

டி.டி.வி.தினகரனை நம்பி வந்து எம்.எல்.ஏக்கள் பதவியை இழந்தது மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் நடுத்தெருவுக்கு வந்து விட்டதாக கருதும் அமமுக நிர்வாகிகள் இப்போது சோகத்தில் வெதும்பித் தவிக்கிறார்கள்.  அடுத்து தமிழகத்தில் ராஜ்ஜியம் நடத்த்ப்போகிறோம் என எதிர்பார்த்திருந்த அமமுகவுக்கு பூஜ்ஜியம் மட்டுமே கிடைத்திருப்பதால் இனி எதிர்காலம் என்னவாகுமோ என அரண்டு போய்க்கிடக்கிறார்கள் அக்கட்சியினர்.

 
இதனால் பலரும் அதிமுக – திமுகவில் இணைய முடிவெடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் பல மாதங்களுக்கு முன்பிருந்தே திமுகவில் சேரப்போவதாக கூறி வந்த தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய முடிவெடுத்து தூது விட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது கருத்துக்களை காதுவாங்கிக் கூட டி.டி.வி தினகரன்கேட்பதில்லை என்கிற விரக்தியில் இருந்து வருகிறார் தங்க தமிழ்செல்வன். 

அவருக்கு ராஜ்யசபா எம்பி, பதவி கொடுத்தால் அமமுக.,வை உடைக்கவும், அதிமுகவில் இணையவும் தயாராக இருப்பதாக, அமைச்சர் தங்கமணி மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு  தங்க தமிழ்செல்வன் கூறி அனுப்பி இருக்கிறார்.  இது குறித்து, அதிமுகவினர்,  ’’அதிமுக., சார்பில், அடுத்த மாதம், மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில், ஒன்று, பாமகவுக்கு. மீதமுள்ள இரண்டில் ஒன்றை, தமிழக பா.ஜவினர் கேட்கின்றனர். 

மூன்றாவது சீட்டுக்கு தம்பிதுரை, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சீனியர்கள் மோதுகின்றனர். யாருக்கு ஒதுக்குவது என, மேலிடம் குழப்பத்தில் உள்ளது. இந்நிலையில், தனக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால், அ.தி.மு.க.,வில் இணைவதற்கு தயார் என தங்க தமிழ்செல்வன் துாது அனுப்பி இருக்கிறார். 

அப்படி பதவி தந்தால் அமமுகவில் உள்ள தன் ஆதரவாளர்களையும் அழைத்து வருவதாக உறுதி அளித்துள்ளார். சமீபத்தில் டி.டி.வி.தினகரன்,  ’செந்தில்பாலாஜி, தி.மு.க.,வில் இணைந்தது, அவரது புத்திசாலித்தனம்’ எனக் கூறியிருந்தார்.  அதன் பிறகும் தங்க தமிழ்செல்வன் சும்மாயிருப்பாரா..?