×

நீங்க எதுக்கு கவலைப்படுகிறீங்க தினகரன் சார்? கனிமொழி விளாசல்!

மக்களுக்கு ரூ.1000 அளிக்கமுடியுமா என்று தினகரன் ஏன் கவலைப்படுகிறார்? என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி கோவில்பட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரான சிபிஎம் சீனிவாசனை திமுக எம்.பி. கனிமொழி ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கோவில்பட்டி தொகுதியில், எங்கள் வேட்பாளர் சீனிவாசன் அமோக வெற்றிபெறுவார். ஆர்கே நகரில் இருந்து கோவில்பட்டியில் போட்டியிடும் தினகரன் அந்த தொகுதி மக்களுக்கே இதுவரை எதுவும் செய்யவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு இங்குள்ள மக்களுக்கு எதுவும்
 

மக்களுக்கு ரூ.1000 அளிக்கமுடியுமா என்று தினகரன் ஏன் கவலைப்படுகிறார்? என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி கோவில்பட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரான சிபிஎம் சீனிவாசனை திமுக எம்.பி. கனிமொழி ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கோவில்பட்டி தொகுதியில், எங்கள் வேட்பாளர் சீனிவாசன் அமோக வெற்றிபெறுவார். ஆர்கே நகரில் இருந்து கோவில்பட்டியில் போட்டியிடும் தினகரன் அந்த தொகுதி மக்களுக்கே இதுவரை எதுவும் செய்யவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு இங்குள்ள மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

அதனால் மக்கள் வெறுப்பில் உள்ளனர். இதனால் திமுக கூட்டணி வேட்பாளரே வெற்றிபெறுவார் என்பது உறுதி. மக்களுக்கு ரூ.1000 அளிக்கமுடியுமா என்று ஆட்சிக்கு வருபவர்கள் தான் கவலைப்பட வேண்டும். தினகரன் ஏன் கவலைப்படுகிறார்? கருணாநிதி ஆட்சியில் வருவாய் மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது. இலவச கலர் டிவி அளிக்கப்பட்டது. 7000ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ” எப்படி ஆட்சி நடத்தவேண்டும் ; திட்டங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று கருணாநிதியிடம் ஸ்டாலின் கற்றுக்கொண்டுள்ளார். அதை அவர் பார்த்துக்கொள்வார்; அதை பற்றி தினகரன் கவலைப்பட தேவையில்லை. இங்கு குடிநீர் திட்டம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து தேவைகளும் தீர்த்துவைக்கப்படும் ” என்றார்.