×

திமுகவுக்கு எதிராக களமிறங்கிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மகன்!!

கோவை சுகுணாபுரத்தில் திமுக எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்றவர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷ். அப்போது பேசிய விகாஷ், “ஆயிரம் கருணாநிதி சேர்ந்தால்கூட முதல்வரின் தாய் தவுசாயம்மாளுக்கு ஈடாக முடியாது. அவர் தனது மகனை நல்ல மனிதனாக வளர்த்துள்ளார். ஆ.ராசாவின் பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் எந்த ஊருக்குள்ளும் போக முடியாது’ என்றார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷ் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை.கடந்த பிப்ரவரி மாதம் மறைந்த
 

கோவை சுகுணாபுரத்தில் திமுக எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்றவர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷ். அப்போது பேசிய விகாஷ், “ஆயிரம் கருணாநிதி சேர்ந்தால்கூட முதல்வரின் தாய் தவுசாயம்மாளுக்கு ஈடாக முடியாது. அவர் தனது மகனை நல்ல மனிதனாக வளர்த்துள்ளார். ஆ.ராசாவின் பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் எந்த ஊருக்குள்ளும் போக முடியாது’ என்றார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷ் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை.கடந்த பிப்ரவரி மாதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் நடத்திவைக்கப்பட்ட திருமணத்தில் இவர் கலந்துகொண்டார் . தற்போது பல அரசியல் நிகழ்வுகளில் விகாஷ் கலந்துகொள்வதால் அவர் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஆ.ராசா, முதல்வர் பழனிசாமி குறித்த அவதூறு பேச்சுக்கு நேற்று மன்னிப்பு கேட்டார். முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி இருவரையும் அரசியல் குழந்தைகளாக நினைத்து தான் அப்படி பேசினேன். எனது பேச்சால் முதல்வர் கண்கலங்கினார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் உண்மையில் முதல்வர் பழனிசாமி மனம் வேதனை பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது