×

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவரின் உடல்நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. முன்னதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் இறுதியில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை எனவும் அவரது
 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவரின் உடல்நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

முன்னதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் இறுதியில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை எனவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதை தொடர்ந்து கடந்த 2-ம் தேதி மருத்துவமனையிலிருந்து விஜயகாந்த் வீடு திரும்பினார். இதேபோல் அவரது மனைவி பிரேமலதாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.