×

‘வட சென்னைக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்’ – டிடிவி தினகரன் அறிவிப்பு!

நிர்வாக வசதிக்காக வட சென்னை வடக்கு இரண்டாக பிரிக்கப்படுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அம்மா மக்கள் முன்னேற்ற கழக வட சென்னை வடக்கு மாவட்ட கழக பணிகளை விரைவு படுத்தும் வகையில் வட சென்னை வடக்கு(கிழக்கு) மாவட்டம் மற்றும் வட சென்னை வடக்கு(மேற்கு) மாவட்டம் என கழக அமைப்பு ரீதியாக இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு கீழ்க்கண்டவாறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும். வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்: டாக்டர்
 

நிர்வாக வசதிக்காக வட சென்னை வடக்கு இரண்டாக பிரிக்கப்படுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “அம்மா மக்கள் முன்னேற்ற கழக வட சென்னை வடக்கு மாவட்ட கழக பணிகளை விரைவு படுத்தும் வகையில் வட சென்னை வடக்கு(கிழக்கு) மாவட்டம் மற்றும் வட சென்னை வடக்கு(மேற்கு) மாவட்டம் என கழக அமைப்பு ரீதியாக இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு கீழ்க்கண்டவாறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.

வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்: டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி. பெரம்பூர் சட்டமன்ற தொகுதி
வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்: வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி

வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பில் லக்ஷ்மிநாராயணன் அவர்களும், வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் சுந்தர் அவர்களும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

இதுவரை பெரம்பூர் பகுதி கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் லட்சுமி நாராயணன் அவர்களும் கொளத்தூர் தொகுதி கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் வெற்றி நகர் சுந்தர் அவர்களும் அவரவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்கள். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கழக செயலாளர்களுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.