×

திமுகவ நம்பி ஓட்டுப்போட்ட ரோட்டுல தான் நிக்கணும்- டிடிவி தினகரன்

சிவகங்கையில் போட்டியிடும் அமமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன், “நாடே பணப்பற்றாக்குறையில் உள்ள போது தீய சக்தி, துரோக கூட்டணிகள் பணத்தை மட்டும் நம்பியுள்ளன. மக்களுக்கு சேவை செய்யத்தான் பதவியே தவிர, மக்கள் பணத்தை சுரண்ட அல்ல என்பதை புரிய வைக்க வேண்டும். திமுகவினர் இலவுகாத்த கிளி போல ஆட்சிக்கு வர துடித்துக்கொண்டிருக்கின்றனர். தமிழக மக்கள் ஏமாளிகள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்ட
 

சிவகங்கையில் போட்டியிடும் அமமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய டிடிவி தினகரன், “நாடே பணப்பற்றாக்குறையில் உள்ள போது தீய சக்தி, துரோக கூட்டணிகள் பணத்தை மட்டும் நம்பியுள்ளன. மக்களுக்கு சேவை செய்யத்தான் பதவியே தவிர, மக்கள் பணத்தை சுரண்ட அல்ல என்பதை புரிய வைக்க வேண்டும். திமுகவினர் இலவுகாத்த கிளி போல ஆட்சிக்கு வர துடித்துக்கொண்டிருக்கின்றனர். தமிழக மக்கள் ஏமாளிகள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

அம்மாவின் உண்மையான தொண்டர்களால் இயக்கப்படும் அமமுகவிற்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.திமுகவை நம்பினால் யாராக இருந்தாலும் சாலையில் தான் நிற்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து அதிகரித்து விடும். மக்கள் மற்றும் இயற்கையை பாதிக்கும் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தில் வந்ததற்கு காரணம் திமுக. எடப்பாடி பச்சோந்தி, காலில் விழுந்து பதவியை வாங்கியவர்” என சாடினார்.