×

கார் மீது மோதிய லாரி : பெண் காவலர் பரிதாப பலி!!

தேர்தல் பணியில் இருந்த கார் மீது லாரி மோதியதில் பெண் தலைமை காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்திலிருந்து தேர்தல் பறக்கும் படையினர் குடியாத்தம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே காட்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று அதிவேகமாக வந்து தேர்தல் பறக்கும்படையினர் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சாலையில் குப்புற கவிழ்ந்து விழுந்து விபத்து சிக்கியது. பயங்கர சத்ததுடன் நடந்த இந்த விபத்தை அறிந்த
 

தேர்தல் பணியில் இருந்த கார் மீது லாரி மோதியதில் பெண் தலைமை காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்திலிருந்து தேர்தல் பறக்கும் படையினர் குடியாத்தம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே காட்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று அதிவேகமாக வந்து தேர்தல் பறக்கும்படையினர் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சாலையில் குப்புற கவிழ்ந்து விழுந்து விபத்து சிக்கியது. பயங்கர சத்ததுடன் நடந்த இந்த விபத்தை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடிவந்து அதில் இருந்தவர்களை மீட்டனர்.

இந்நிலையில் கார் – லாரி விபத்தில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக உள்ள மாலதி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன் விபத்தில் ஒளிப்பதிவாளர் பிரகாசம் , மத்திய படை காவலர் மனோஜ் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இறந்த பெண் காவலர் மாலதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் படுகாயம் அடைந்தவர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள குடியாத்தம் போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.