×

“ரஜினிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது உண்மையே” – டி.ஆர்.பாலு

நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 3 ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக கூறி வந்தார். 90’ஸில் வெளியான படங்களிலும் கூட பகிரங்கமாக அரசியல் கருத்துக்களை முன்வைத்து வந்த ரஜினி, நிச்சயம் அரசியலுக்கு வந்து விடுவார் என பேசப்பட்டது. அதன் படியே, கடந்த நவம்பர் மாதம் தான் ஜனவரியில் கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்தார். அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வந்தது. இதனிடையே, ரஜினிக்கு பாஜக தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் அவர் கட்சி தொடங்கியதாகவும் புதிய கட்சி தொடங்கினாலும் அவர் பாஜகவுக்கு
 

நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 3 ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக கூறி வந்தார். 90’ஸில் வெளியான படங்களிலும் கூட பகிரங்கமாக அரசியல் கருத்துக்களை முன்வைத்து வந்த ரஜினி, நிச்சயம் அரசியலுக்கு வந்து விடுவார் என பேசப்பட்டது. அதன் படியே, கடந்த நவம்பர் மாதம் தான் ஜனவரியில் கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்தார். அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வந்தது.

இதனிடையே, ரஜினிக்கு பாஜக தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் அவர் கட்சி தொடங்கியதாகவும் புதிய கட்சி தொடங்கினாலும் அவர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான், தான் கட்சி தொடங்கவில்லை என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டார். உடல்நிலை காரணமாக எடுக்கப்பட்ட இந்த முடிவை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு பெரும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு, ரஜினிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மை என்றும் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற முடிவை விமர்சனம் செய்வது முறையல்ல என்றும் கூறினார்.