×

“எங்களை தனிமைப்படுத்த முயற்சி நடக்கிறது” – திருமாவளவன் சூசகம்!

சாதி, மதம், இனத்தைக் கடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தனிமைப்படுத்துவதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரக்கோணத்தில் படுகொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் குடும்பத்துக்கு அரசு தலா 4.30 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு 8 லட்சம் ரூபாய் நிதியும், குடும்பத்தினருக்கு 2 ஏக்கர் நிலமும் வழங்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்டோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், நிலமும் வழங்க
 

சாதி, மதம், இனத்தைக் கடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தனிமைப்படுத்துவதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரக்கோணத்தில் படுகொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் குடும்பத்துக்கு அரசு தலா 4.30 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு 8 லட்சம் ரூபாய் நிதியும், குடும்பத்தினருக்கு 2 ஏக்கர் நிலமும் வழங்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்டோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், நிலமும் வழங்க வேண்டும்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். பாமகவுடன் கொள்கை ரீதியாக மட்டுமே எங்கள் கட்சி வேறுபடுகிறதே தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகச் செயல்படும் எங்கள் இயக்கம் சாதி, மத, இனத்தைக் கடந்தது. எனினும் எங்களைத் தனிமைப்படுத்தும் முயற்சி நடக்கிறது” என்றார்.