×

“தேமுதிக தலைமையில் 3வது அணி அமைய வாய்ப்பு” : விஜயபிரபாகரன் பரபரப்பு பேட்டி!

தமிழகத்தில் அரசியல் களம் மாறும் என விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார் . இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், “திமுக, அதிமுகவுக்கு மாற்று தேமுதிக மட்டுமே, அதை நிரூபித்து காட்டியுள்ளோம். தற்போது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை, கண்டிப்பாக அரசியல் களம் மாறும். தேமுதிக தனித்து நிற்க எந்த அச்சமும் இல்லை. தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும். விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. எந்த பிரச்சனையும் இல்லை” என்றார்.
 

தமிழகத்தில் அரசியல் களம் மாறும் என விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார் .

இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், “திமுக, அதிமுகவுக்கு மாற்று தேமுதிக மட்டுமே, அதை நிரூபித்து காட்டியுள்ளோம். தற்போது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை, கண்டிப்பாக அரசியல் களம் மாறும். தேமுதிக தனித்து நிற்க எந்த அச்சமும் இல்லை. தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும். விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. எந்த பிரச்சனையும் இல்லை” என்றார்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பாஜக – அதிமுக கூட்டணி தேர்தலை சந்திக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக நிலைப்பாடு என்ன என்பது இதுவரை தெரியவில்லை . முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியும், கட்சி பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக தொண்டர்கள் தனித்து களம்காண விரும்புவதாக தெரிவித்தார். தற்போது அதையே அவரது மகன் விஜயபிரபாகரன் கூறியிருப்பது அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது .