சேலம் எட்டு வழிச் சாலை வந்த பிறகுதான் அதன் அருமை தெரியும்! – அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை வந்த பிறகே அதன் அருமை மக்களுக்குத் தெரியவரும் என்று செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் நிருபர்கள் சினிமா டிக்கெட் விலை குறைப்பு, 8 வழிச் சாலை பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “சினிமா டிக்கெட் ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம். சினிமா டிக்கெட் ஜி.எஸ்.டி-யை பொருத்தவரை ஒரே மாதிரியா 28 சதவிகிதம் என்று இருந்ததை ரூ.100 வரை இருந்தால் 18 சதவிகிதம் அதற்கு மேல் 28 சதவிகிதம் என்று மாற்றி வாங்கிக்கொடுத்தது எங்கள் அரசுதான். கேளிக்கை வரி என்பது 30 சதவிகிதம் இருந்தது. அது அதிகமாக இருக்கிறது என்று கூறியதால் 10 சதவிகிதமாக குறைத்தோம். மீண்டும் கோரிக்கை விடுத்ததால் எட்டு சதவிகிதமாக குறைக்கப்பட்டது.