×

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் : களமிறங்கிய விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை: தேமுதிகவின் 16-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கொடியேற்றினார். இந்த விழாவின் போது கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிலையில் தேமுதிக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அதன் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டமன்ற தேர்தல் 2021 வருவதற்கு இன்னும் 8 மாத காலமே
 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை: தேமுதிகவின் 16-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கொடியேற்றினார். இந்த விழாவின் போது கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிலையில் தேமுதிக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அதன் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டமன்ற தேர்தல் 2021 வருவதற்கு இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக தேமுதிக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனியாக களம் காண வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக கூறி தேர்தல் ஆட்டத்தை சூடுபிடிக்க வைத்துள்ள பிரேமலதா மீண்டும் தேமுதிகவை கூட்டணி இன்றி களமிறக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் தேமுதிக நிச்சயம் அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என அக்கட்சியின் அமைச்சர்கள் சிலர் கூறி வருவது கூடுதல் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.