×

‘அப்பா எஸ்.ஏ.சி. மக்கள் இயக்கம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார் விஜயின் தந்தை!

விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் புதியதாக ‘அப்பா எஸ்.ஏ.சி. மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. ‘அப்பா எஸ்.ஏ.சி. மக்கள் இயக்கம்’ என்ற கட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சாலிகிராமத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. அந்த கட்சியின் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பொது செயலாளராக ஜெயசீலனும் நியமிக்கப்பட்டுள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் சாலிகிராமத்தில் ஆலோசனை நடத்திய நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின்
 

விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் புதியதாக ‘அப்பா எஸ்.ஏ.சி. மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.

‘அப்பா எஸ்.ஏ.சி. மக்கள் இயக்கம்’ என்ற கட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சாலிகிராமத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. அந்த கட்சியின் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பொது செயலாளராக ஜெயசீலனும் நியமிக்கப்பட்டுள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் சாலிகிராமத்தில் ஆலோசனை நடத்திய நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் தற்போதைய மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அவரின் ஆதரவாளர்கள் பனையூர் அலுவலகத்தின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் ரசிகர்களும் (புஸ்ஸி ஆனந்த்), அதிருப்தி ரசிகர்களும் (எஸ்.ஏ.சி) திராவிட கட்சிகளுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.

முன்னதாக விஜய் மக்கள் இயக்கத்தை, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றியாக எஸ்.ஏ. சந்திரசேகர், இது விஜயின் கட்சி அல்ல என்றும் விஜய்க்கும் அரசியல் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார். விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி என்றும் எதிர்காலத்தில் இந்த இயக்கத்தில் விஜய் இணைவாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.