தனது தளபதிகள் இருவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கிய ராகுல்- மாணிக்கம்தாகூர் நியமனத்தின் பின்னணி
தனது தளபதிகளாக செயல்பட்ட இருவருக்கு தமிழகத்தில் முக்கிய பொறுப்பு கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் ராகுல் காந்தி.
முதலாக பிரவீன் சக்கரவர்த்தி அவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் மூலம் ராஜ்யசபா பெற்றுக் கொடுத்தார்கள். ராகுலுடன் நெருக்கமாக பழகக்கூடிய மாணிக்க தாகூர் அவரை காங்கிரஸ் உடைய தலைவராக நியமித்திருக்கிறார்கள். இது அனைத்தும் வரும் காலங்களில் காங்கிரஸ் வளர்வதற்கான ஒரு அடித்தளமாக பார்க்கப்படுகிறது. பாஜக எப்படி முக்குலத்தோர் சமுதாயத்தை வாக்குகளை பெற வேண்டும் என்று நினைத்து நயினார் நாகேந்திரனை மாநில தலைவர்களாக நியமித்தார்களோ அதேபோன்றுதான் காங்கிரஸிலும் மாநிலத் தலைவர் நியமனம் நடைபெற்று இருக்கிறது.
மாணிக்கம் தாகூர் அவரும் ஒரு முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான். தென் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் உடைய ஓட்டுகளை ஒருங்கிணைப்பதற்காகவே பாஜகவிற்கும் முக்குலத்தோர் சமுதாயம் வாக்களிக்கவில்லை, அதைப் போன்று அதிமுகவிற்கும் வாக்களிக்கவில்லை. புதிதாக வந்துள்ள தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்து தென் மாவட்டத்தில் காங்கிரசை பெரிய அளவில் வளர்க்கலாம் என முடிவு செய்திருக்கிறது காங்கிரஸ் தலைமை. அதனால்தான் துடிப்பாக உள்ள ஒருவரை காங்கிரஸில் நியமிக்க வேண்டும் என ராகுலின் வலதுகரமாக செயல்படுபவர் தான் அனைத்து ஆலோசனைகளையும் கூறினார் என்கிறது அரசியல் வட்டாரம்.