×

நான் ஊழல் இல்லாதவன் என்பதால் 30 நொடியில் தூங்கி விடுவேன்.. மோடியை பார்த்து பயப்படமாட்டேன்.. ராகுல் காந்தி

நான் ஊழல் இல்லாதவன் என்பதால் 30 நொடியில் தூங்கி விடுவேன், மோடியை பார்த்து பயப்படமாட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திருநெல்வேலி மாவட்டத்தில் தனது கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பிரதமர் என்னை பயமுறுத்த முடியாது. அவர் என்னை பயமுறுத்துகிறார் என்ற எண்ணம் கேலிக்குரியது. அவர் என்னை பயமுறுத்த முடியாதற்கு ஒரே காரணம், அவர் என்னை கட்டுப்படுத்த முடியாததற்கு ஒரு காரணம் நான்
 

நான் ஊழல் இல்லாதவன் என்பதால் 30 நொடியில் தூங்கி விடுவேன், மோடியை பார்த்து பயப்படமாட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திருநெல்வேலி மாவட்டத்தில் தனது கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பிரதமர் என்னை பயமுறுத்த முடியாது. அவர் என்னை பயமுறுத்துகிறார் என்ற எண்ணம் கேலிக்குரியது. அவர் என்னை பயமுறுத்த முடியாதற்கு ஒரே காரணம், அவர் என்னை கட்டுப்படுத்த முடியாததற்கு ஒரு காரணம் நான் ஊழல் இல்லாதவன். நான் ஊழல் இல்லாததால் உண்மை என்ன என்பதை அவரிடம் என்னால் சொல்ல முடியும்.

பிரதமர் மோடி

நான் ஊழல் இல்லாதவன் என்பதால் அது என்னை தைரியமாக்குகிறது. நான் ஊழல் இல்லாதவன், எனவே அவர் என்னை 24 மணி நேரமும் குறிவைக்கிறார். ஏனென்றால் அவர் (மோடி) ஊழல் நிறைந்தவர். அவர் ஒரு நேர்மையான மனிதரை எதிர்க்கொள்கிறார். மோடிக்கு நான் பயப்படாததால் 30 வினாடிகளில் நான் இரவில் தூங்கி விடுவேன். தமிழக முதல்வர் நேர்மையாக இல்லாததால் அவரால் இரவில் தூங்க முடியாது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

அவர் நேர்மையானவர் அல்ல என்பதால், அவர் நரேந்திர மோடிக்கு எதிராக நிற்க முடியாது. தழிழக மக்களை கட்டுப்படுதத முடியும் என்று மோடி நினைக்கிறார். ஏனென்றால் தமிழகத்தின் முதல்வர் ஊழல் நிறைந்தவர். நம்மால் ஏன் மேட் இன் தமிழ்நாடு செய்ய முடியவில்லை. டெல்லியில் உள்ள அரசாங்கம் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை ஆதரிக்கவில்லை. நம் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஆதரவளிக்கவில்லை என்பதுதான் முக்கிய காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.