×

கமல்ஹாசன் சிப்பிக்குள் இருக்கும் முத்து- ராதிகா சரத்குமார்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை துணை பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் வாக்குசேகரித்தார். அப்போது பேசிய ராதிகா சரத்குமார், “கமல்ஹாசன் சிப்பிக்குள் முத்தாக கிடைத்தவர். நாளை தமிழ்நாட்டின் பேர் சொல்லும் பிள்ளையாக இருப்பார். இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி திருடுகின்றன. தண்ணீர் பஞ்சத்திற்காக தூர்வாரியுள்ளோம் என்று கூறி அவர்கள் பணத்தைதான் தூர்வாரியுள்ளனர். இதுதான்
 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை துணை பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் வாக்குசேகரித்தார்.

அப்போது பேசிய ராதிகா சரத்குமார், “கமல்ஹாசன் சிப்பிக்குள் முத்தாக கிடைத்தவர். நாளை தமிழ்நாட்டின் பேர் சொல்லும் பிள்ளையாக இருப்பார். இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி திருடுகின்றன. தண்ணீர் பஞ்சத்திற்காக தூர்வாரியுள்ளோம் என்று கூறி அவர்கள் பணத்தைதான் தூர்வாரியுள்ளனர். இதுதான் உண்மை.கடந்த 50 ஆண்டு காலமாக திமுகவும் அதிமுகவும் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்று பேசிக்கொண்டிருக்கின்றன. அந்த இரண்டு கட்சிகளிலும் பிரதான தலைவர்கள் இல்லை. ஸ்டாலினை திமுகவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுகவில் தலைவர் என்று சொல்வதற்கு ஒருவரும் இல்லை.” எனக் கூறினார். சிப்பிக்குள் முத்து, பேர் சொல்லும் பிள்ளை ஆகிய இரண்டு படங்களிலும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ராதிகா நடித்தார் என்பது குறிப்பிடதக்கது.