×

தேர்தலுக்கு செலவு செய்யாதீர்கள்... ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற மாட்டீர்கள்- புகழேந்தி

 

குடியரசு தின நாளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவமதிப்பு செய்த ரிசர்வ் வங்கி அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “குடியரசு தின நாளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவமதிப்பு செய்த ரிசர்வ் வங்கி அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அவமரியாதை செய்ததோடு மட்டுமில்லாமல் திமிராக பேசியதற்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாசுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்தேன்.  ஏற்கனவே பிஜேபி தான் பிரதான எதிர்க்கட்சி என குருமூர்த்தி மற்றும் பிஜேபியின் முன்னணி தலைவர்கள் முன்மொழிந்ததையே நயினார் நாகேந்திரன் வழிமொழிந்து உள்ளார். எனவே நயினார் நாகேந்திரன் இவ்வாறாகவே பேச வேண்டும்.

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் சொந்த பணம் செலவு செய்ய வேண்டாம். நிச்சயமாக ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறுவது என்பது கடினம்” என தெரிவித்தார்.