×

‘மகனை இழந்து வாடும் தோழர் யெச்சூரிக்கு…’ ராமதாஸ் இரங்கல்!

சீதாராம் யெச்சூரி மூத்த மகன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். சீதாராம் யெச்சூரி மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி (34) நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியை அடுத்த குருகிராமில் ஆஷிஷ் யெச்சூரி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆஷிஷ் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், “மார்க்சிஸ்ட்
 

சீதாராம் யெச்சூரி மூத்த மகன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சீதாராம் யெச்சூரி மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி (34) நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியை அடுத்த குருகிராமில் ஆஷிஷ் யெச்சூரி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆஷிஷ் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், “மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மகனை இழந்து வாடும் தோழர் யெச்சூரிக்கு இந்த சோகத்தை தாங்கும் வலிமையை இயற்கை வழங்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது. இது தோழர் யெச்சூரிக்கு தாங்க முடியாத இழப்பு. அவருக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.