×

“ஆ.ராசா போல எங்க கட்சியில யாராவது பேசி இருந்தா…?” : அன்புமணி ஆவேசம்!!

சேலம் மேற்கு தொகுதியில் பாமக வேட்பாளர் அருளை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் மக்கள் மத்தியில் பேசிய அவர் , “எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயி என்ற தகுதி போதும் ;அதுவே மிகப்பெரிய தகுதி . சமூக நீதி, சமத்துவம் ,இட ஒதுக்கீடு, சுதந்திர தினம், குடியரசு தினம் எதுவும் ஸ்டாலினுக்கு தெரியாது; அவருக்கு கணக்கும் தெரியாது. இதில் அவர் முதலமைச்சராக வேண்டுமா? மீடியா மட்டும் இல்லையென்றால் ஸ்டாலின்
 

சேலம் மேற்கு தொகுதியில் பாமக வேட்பாளர் அருளை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் மக்கள் மத்தியில் பேசிய அவர் , “எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயி என்ற தகுதி போதும் ;அதுவே மிகப்பெரிய தகுதி . சமூக நீதி, சமத்துவம் ,இட ஒதுக்கீடு, சுதந்திர தினம், குடியரசு தினம் எதுவும் ஸ்டாலினுக்கு தெரியாது; அவருக்கு கணக்கும் தெரியாது. இதில் அவர் முதலமைச்சராக வேண்டுமா? மீடியா மட்டும் இல்லையென்றால் ஸ்டாலின் ஒரு ஜீரோ . ஸ்டாலின்தான் வரப்போறாரு; அல்வா தரப்போறாரு; இது முக்கியமான தேர்தல் ;அதனால்தான் நாங்கள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். உழைப்பால் உயர்ந்தவர் தான் முதல்வர் பழனிசாமி” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாமக உடைய மேட்டூர் உபரி நீர் திட்டம் முதல் பல்வேறு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வன்னியர் இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்பதால்தான் நாங்கள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம்.திமுக தலைவர் ஒரு அரசியல் வியாபாரி . அரசியல் குறித்து தனிப்பட்ட முறையில் கருத்து கூறலாம். ஆனால் ஒருவரின் தாயை பற்றி அவதூறாக பேசுவது தவறு. ஆகவே நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். திமுக என்றால் தாய்மைக்கு எதிரான ஒரு கட்சி தான் ;பெண்மையையும் ; தாய்மையையும் மதிக்கத் தெரியாதவர்கள்.

ஆ ராசா போல யாராவது எங்கள் கட்சியில் அப்படி பேசி இருந்தால் நாங்கள் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கி இருப்போம். ஆ. ராசா திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட பெண்களை குறித்து அவதூறாக பேசி பேசி கொண்டு வருகின்றனர் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் ” என்று கூறிய அவர், ஸ்டாலின் யாரையும் நம்பாமல் பிரஷாந்த் கிஷோரை மட்டும் நம்புவதாகவும் சாடினார்.