×

சமூகப்பற்றுக் கொண்ட அதிகாரிகள் நியமனம்… ஸ்டாலினின் நடவடிக்கைக்கு சீமான் வரவேற்பு!

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளிலேயே, அரசு அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், தமிழக தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சனை செய்தித்தாள் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய தலைமை செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டார். அதே போல, முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இறையன்பு மற்றும் உதயச்சந்திரனின் நியமனத்துக்கு வரவேற்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனது
 

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளிலேயே, அரசு அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், தமிழக தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சனை செய்தித்தாள் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய தலைமை செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டார். அதே போல, முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இறையன்பு மற்றும் உதயச்சந்திரனின் நியமனத்துக்கு வரவேற்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் தலைமைச்செயலாளராக நியமிக்கபட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா வெ.இறையன்பு அவர்களுக்கும், முதல்வரின் முதன்மைச்செயலாளர்களாக நியமிக்கபட்டுள்ள சகோதரர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நான்கு குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்!

மக்களுக்கான பணிகள் சிறக்கவும், நல்லதொரு நிர்வாகத்தை அளித்திடவும் நேர்மையும், திறமையும் மட்டுமல்லாது சமூகப்பற்றும் கொண்ட ஐயா இறையன்பு, திறம்பட நிர்வாகம் செய்யும் ஆற்றல்கொண்ட சகோதரர் உதயச்சந்திரன் போன்றவர்கள் நிர்வாகப்பணிகளில் முதன்மையாக முன்னிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.

seese