×

‘சட்டமன்றத்தில் அவை மரபுகளுக்கு உட்பட்டு செயல்பட்டவர் அமைச்சர் துரைக்கண்ணு’- மு.க ஸ்டாலின் இரங்கல்!

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனவால் பாதிக்கப்பட்டு கடந்த 12ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று இரவு 11 மணி அளவில் காலமானார். அமைச்சரின் உடல் அவரது சொந்த ஊரில் அரசு மாரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவரது மறைவுக்கு பாஜக தலைவர் முருகன், தமிழச்சி தங்க பாண்டியன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, வாசன், வைகோ உள்ளிட்ட பல அரசியல்
 

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனவால் பாதிக்கப்பட்டு கடந்த 12ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று இரவு 11 மணி அளவில் காலமானார். அமைச்சரின் உடல் அவரது சொந்த ஊரில் அரசு மாரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவரது மறைவுக்கு பாஜக தலைவர் முருகன், தமிழச்சி தங்க பாண்டியன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, வாசன், வைகோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் மறைவெய்திய செய்தியால் துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல். மூன்று முறை பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று 2016ல் வேளாண்துறை அமைச்சராக பதவியேற்றார். சட்டமன்றத்தில் அவை மரபுகளுக்கு உட்பட்டு செயல்படும் அமைச்சர். பொதுவாழ்வில் உள்ள அனைவரும், அனைத்து அரசியல் கட்சியினரும் சுய பாதுகாப்பு நடைமுறைகளை சரியாக கடைப்பிடித்து ஒழுகிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் சக அமைச்சர்களுக்கும் முதலமைச்சருக்கும் எனது ஆறுதல்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.