சசிகலா மீது டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர்கள் பரபரப்பு புகார் – காரணம் என்ன?
சசிகலா பெங்களூரு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி ரிசார்ட்டுக்கு ஜெயலலிதாவின் காரில் பயணம் செய்தார். அந்தக் காரில் அதிமுகவின் கொடி சொருகி வைக்கப்பட்டிருந்தது. இது அதிமுகவைக் கைப்பற்றப் போவதற்கான சமிக்ஞையாக சசிகலா கூறுகிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறினர். இச்சூழலில் தற்போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் மூத்த நிர்வாகிகளான மதுசூதனன், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் டிஜிபி அலுவலகத்துக்குச் சென்றனர். சசிகலா காரில் அதிமுக கொடியைப் பயன்படுத்தியதற்கு எதிராக அதிமுக சார்பில்
Feb 4, 2021, 17:38 IST
சசிகலா பெங்களூரு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி ரிசார்ட்டுக்கு ஜெயலலிதாவின் காரில் பயணம் செய்தார். அந்தக் காரில் அதிமுகவின் கொடி சொருகி வைக்கப்பட்டிருந்தது. இது அதிமுகவைக் கைப்பற்றப் போவதற்கான சமிக்ஞையாக சசிகலா கூறுகிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறினர்.
இச்சூழலில் தற்போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் மூத்த நிர்வாகிகளான மதுசூதனன், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் டிஜிபி அலுவலகத்துக்குச் சென்றனர். சசிகலா காரில் அதிமுக கொடியைப் பயன்படுத்தியதற்கு எதிராக அதிமுக சார்பில் புகாரளித்துள்ளனர்.