×

கொரோனாவிலிருந்து தப்பிக்க இதை செய்யுங்கள் : அமைச்சர் வேலுமணியின் டிப்ஸ்!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அமைச்சர் வேலுமணி அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், நேற்று ஒரேநாளில் 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.அத்துடன் பலி எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்லும் நிலையில், இதுவரை
 

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அமைச்சர் வேலுமணி அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், நேற்று ஒரேநாளில் 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.அத்துடன் பலி எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்லும் நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 13,395 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “சிறிது மஞ்சள் பொடியை சூடான நீரில் சேர்த்து தினமும் ஆவிபிடித்தல் அவசியம்.பாலில் கலந்து குடித்தால்/தேனுடன் குழைத்து சாப்பிட்டால் சளி/இருமல் குணமாகும். நம் முன்னோர்கள் கண்ட பாரம்பரிய உணவு முறையை பின்பற்றி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வோம். நோய்த்தொற்று எதிரியை வெல்வோம்.” என்று பதிவிட்டுள்ளார்.