×

‘அடுத்தவங்க பேசுவது பற்றி கவலையில்லை.. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான்’ – அமைச்சர் திட்டவட்டம்!

அதிமுக முதல்வர் வேட்பாளர் முதல்வர் பழனிசாமி தான் என அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்தார். கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டியது நாங்கள் தான். அதனை எப்போதோ முடிவு செய்து அறிவித்து விட்டோம். யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு கவலையில்லை. அரியணை ஏறப்போவதும் முதல்வர் தான் என தெரிவித்தார். தொடர்ந்து, மக்களுக்கு உதவி செய்யும் அரசின் கடமையை தான் முதல்வர் செய்திருக்கிறார். எல்லா
 

அதிமுக முதல்வர் வேட்பாளர் முதல்வர் பழனிசாமி தான் என அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்தார்.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டியது நாங்கள் தான். அதனை எப்போதோ முடிவு செய்து அறிவித்து விட்டோம். யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு கவலையில்லை. அரியணை ஏறப்போவதும் முதல்வர் தான் என தெரிவித்தார்.

தொடர்ந்து, மக்களுக்கு உதவி செய்யும் அரசின் கடமையை தான் முதல்வர் செய்திருக்கிறார். எல்லா ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து ஆலோசனை நடக்கிறது. கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்காக தான் ரூ.2,500 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதில் கூட அரசியல் சாயம் பூசுகிறார்கள் என்று கூறினார்.

மேலும், கமல்ஹாசன் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. அரசை யார் விமர்சித்தாலும் அவர்களுக்கு பதிலடி கொடுப்போம். அவர் அரசியலுக்கு வருவதால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அவர் உண்மைக்கு புறம்பாக பேசி பரப்புரை செய்வதால் தான் அவரின் கருத்துக்கு நாங்கள் பதில் கூறுகிறோம் என்றும் தெரிவித்தார்.