×

“அதிமுக தொண்டர்களின் காலை பிடிக்கிறார் கமல்” – அமைச்சர் விமர்சனம்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அதிமுக தொண்டர்களின் காலை பிடிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்.ஜி.ஆரை அதிமுகவினர் மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும். அவரின் பெயரை பயன்படுத்தி அதிமுகவினரின் காலை பிடிக்கிறார் கமல்ஹாசன். அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு எனக் கடுமையாக விமர்சித்தார். மேலும், லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தலுக்கான
 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அதிமுக தொண்டர்களின் காலை பிடிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்.ஜி.ஆரை அதிமுகவினர் மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும். அவரின் பெயரை பயன்படுத்தி அதிமுகவினரின் காலை பிடிக்கிறார் கமல்ஹாசன். அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு எனக் கடுமையாக விமர்சித்தார். மேலும், லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையின் போது, “எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன் நான். அவர் எங்களின் சொத்து. பேனரில் அவரது போட்டோவை சிறியதாக போட்டவர்கள் எல்லாம் இப்போது என்னை எதிர்க்கிறார்கள்” எனக் கூறியிருந்தார்.

கமல்ஹாசன் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுவது அதிமுகவினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது. எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி அதிமுக வாக்குகளை கமல்ஹாசன் கலைக்க பார்ப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இத்தகைய சூழலில் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தி கமல், அதிமுகவினர் காலை பிடிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.