×

எம்ஜிஆர் பாணியில் படுத்துக் கொண்டே இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட கார்த்திக்! எல்லாம் நடிப்பா கோபால்…

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான கார்த்திக் மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்திவருகிறார். நடிகர் கார்த்திக் கட்சி, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், அதிமுக கூட்டணிக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்து கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்துவருகிறார். சட்டமன்ற தேர்தலுக்கும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவேன் என கூறிய நடிகர் கார்த்திக்குக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என வந்தது. இந்நிலையில்
 

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான கார்த்திக் மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்திவருகிறார். நடிகர் கார்த்திக் கட்சி, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், அதிமுக கூட்டணிக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்து கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்துவருகிறார்.

சட்டமன்ற தேர்தலுக்கும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவேன் என கூறிய நடிகர் கார்த்திக்குக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என வந்தது.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவன தலைவர் கார்த்திக், எம்.ஜி.ஆர் பாணியில் படுத்துக் கொண்டே இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார். தேர்தலுக்காக கார்த்திக் நடத்தும் நாடகமா என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர். அதுக்கு முக்கிய காரணம் மூச்சுத்திணறல் என மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு காலில் ஸ்கேன் எடுக்கப்பட்டது போன்ற புகைப்படம் வெளியானதால் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவமனை நாடகம் எத்தனை நாட்களுக்கு என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் எல்லா புகைப்படங்களும் கேமராவுக்காக போஸ் கொடுப்பது போல இருப்பதால் கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.