×

’விடியா அரசின் காவல்துறை ராஜேந்திர பாலாஜி மீது பொய் வழக்கு போட்டுள்ளது’ - எடப்பாடி பழனிசாமி கண்டனம்..

 

 ஆளும் அதிமுக அரசு பொய் வழக்கு போட்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய துடிப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளார் எடப்பாடி பழனிசாமி கணடனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுளாள அறிக்கையில், “ திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் , கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகள்,  சுமத்தி பொய் வழக்குகள் போடுவது தொடர்கதையாகி வருகிறது.  இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான திரு .டி. ராஜேந்திர பாலாஜி அவர்கள் அமைச்சராக இருந்த பொழுது,  அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக புகார்கள் வந்துள்ளதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  அந்த புகாரின் அடிப்படையில்,  அந்த புகாருக்கு எந்தவிதமான நேரடி முகாந்திரமும் இல்லாத நிலையில், முன்னாள் அமைச்சரை இவ்வழக்கில் இணைத்து அவரை கைது செய்ய துடிக்கிறது இந்த விடியா அரசு. 

உச்ச நீதிமன்றத்தில் அவர் பிணை கோரும் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையி, ல் ஆளும் திமுக அரசு தன்வசம் உள்ள காவல்துறையின் மூலம் திரு ராஜேந்திர பாலாஜி அவர்களின் குடும்ப உறுப்பினர்களான வசந்த் குமார்,  ரமணா மற்றும் வாகன ஓட்டுநர் திரு ராஜ்குமார் ஆகிய மூவரையும் எந்தவித புகாரும் இல்லாத நிலையில்,  அமைச்சரின் உறவினர்கள், தெரிந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக சட்டத்திற்குப் புறம்பாக அடைத்து வைத்து கொடுமை படுத்தியுள்ளனர்.

இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை காவல்துறையினரின் இந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததோடு,  இந்த வழக்கிற்காக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் யாரையும் சட்டத்திற்கு முரணாக தொந்தரவு செய்யக்கூடாது என்றும், உடனடியாக மூவரையும் விடுவிக்க வேண்டுமென்றும் மேலும் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் திரு ராஜேந்திர பாலாஜி அவர்கள் தனக்குள்ள உரிமையை, புனையப்பட்ட இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்க கோரி உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ள , இந்த விடியா அரசின்  காவல்துறை முன்னாள் அமைச்சர் திரு ராஜேந்திர பாலாஜி அவர்களை கைது செய்ய துடிப்பதையும் , உயர் நீதிமன்ற மதுரை கிளை என் கடும் கண்டனத்திற்கு பிறகும் அவரும் உறவினர்களை தொந்தரவு செய்வதையும் கடுமையாக கண்டிக்கிறேன். “  என்று குறிப்பிட்டுள்ளார்