×

முதல்வராக தாக்குப்பிடிப்பது சாதாரண விஷயமல்ல- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

விழுப்புரம் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “விவசாய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக தாக்குப்பிடிப்பது சாதாரண விஷயமல்ல, ஜெயலலிதா மறைவுக்கு பின் பெரும்பான்மை உறுப்பினர்களில் ஆதரவுடன் முதல்வரானேன். என்னை பற்றி முக ஸ்டாலின் எவ்வளவு பேசினாலும் பரவாயில்லை. தாங்கிக்கொள்ளும் சக்தி எனக்கு உள்ளது. வரும் தேர்தல்தான் திமுகவுக்கு இறுதி தேர்தல், திமுகவினருக்கு நல்ல எண்ணம் கிடையாது. தீய எண்ணம் படைத்தவர்கள். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க
 

விழுப்புரம் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “விவசாய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக தாக்குப்பிடிப்பது சாதாரண விஷயமல்ல, ஜெயலலிதா மறைவுக்கு பின் பெரும்பான்மை உறுப்பினர்களில் ஆதரவுடன் முதல்வரானேன். என்னை பற்றி முக ஸ்டாலின் எவ்வளவு பேசினாலும் பரவாயில்லை. தாங்கிக்கொள்ளும் சக்தி எனக்கு உள்ளது. வரும் தேர்தல்தான் திமுகவுக்கு இறுதி தேர்தல், திமுகவினருக்கு நல்ல எண்ணம் கிடையாது. தீய எண்ணம் படைத்தவர்கள். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு அதை முடித்தபிறகு தொடங்கியும் வைக்கிரோம். அதிமுக கூட்டணி வலுவான கூட்டணி, வெற்றிக்கூட்டணி என்பதால் திமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஒரே இயக்கம் அதிமுக. முழுமையான வெளிப்படை தன்மையுடன் இயங்குகிற ஒரே அரசு அதிமுக” எனக் கூறினார்.