×

மாவோயிஸ்ட் மற்றும் நக்ஸல் இயக்கங்களின் கொள்கைகளை திமுக ஆதரிக்கிறதா?

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய “walking with comrades” என்ற புத்தகம் சார்ந்த பாடப்பகுதிகளை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியதற்கு திமுகவின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்களான மாவோயிஸ்ட் மற்றும் நக்ஸல் இயக்கங்களை பெருமைப்படுத்தும் விதமாக எழுதப்பட்ட ஒர் புத்தகத்தின் பகுதிகளை கல்லூரி மாணவர்கள் படிக்க கூடாது என்பதன் விளைவாகவே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பிச்சு மணி இதை செய்துள்ளார்.
 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய “walking with comrades” என்ற புத்தகம் சார்ந்த பாடப்பகுதிகளை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியதற்கு திமுகவின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்களான மாவோயிஸ்ட் மற்றும் நக்ஸல் இயக்கங்களை பெருமைப்படுத்தும் விதமாக எழுதப்பட்ட ஒர் புத்தகத்தின் பகுதிகளை கல்லூரி மாணவர்கள் படிக்க கூடாது என்பதன் விளைவாகவே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பிச்சு மணி இதை செய்துள்ளார்.

தடை செய்யப்பட்ட இயக்கங்களான மாவோயிஸ்ட் மற்றும் நக்ஸல் இயக்கங்களின் கொள்கைகளை திமுக ஆதரிக்கிறதா?

அருந்ததி ராய் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ஆயுத போராட்டம் என்பது 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நடைபெற்றது. அப்போது திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அங்கமாக இருந்தது. அப்போது அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திமுக இப்போது நீலிக் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறது. மேலும் அந்த நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தலைமையிலேயே இந்திய துணை ராணுவப்படைகள் மத்திய இந்திய பகுதிகளில் அந்த ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கு எதிரான ஆப்ரேஷனை செய்தனர். உண்மையான அக்கரை இருந்திருந்தால் திமுக அப்போதே தடுத்திருக்கலாமே?

மாவோயிஸ்டுகள்/ நக்ஸல்களுக்கு எதிரான இந்த யுத்ததில் பல நூற்றுக்கணக்கான துணை ராணுவத்தினரும் தங்களின் உயிர்களை பலி கொடுத்தனர். அந்த CRPF படைகளில் பல்வேறு தமிழகத்தை சேர்ந்த வீரர்களும் உயிரிழந்தனர். அப்போது எங்கே சென்றது இந்த திமுக?

சென்ற வாரம் கூட கேரளாவின் வயநாடு பகுதியில் கேரள அரசு படைகள் சில மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்றனர். கேரளாவை ஆண்டு கொண்டிருக்கும் இடதுசாரி அரசுடன் மத்தி மற்றும் மாநிலத்தில் கூட்டணியில் இருக்கும் திமுக அவர்களிடம் “எதற்காக மாவோயிஸ்டுகளை சுட்டு கொன்றீர்கள்” என கேள்வி கேட்க தயாரா?

இப்படி இருக்கையில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும் ஒரு பாடத்தை நீக்கியதற்கு , திமுகவிற்கும் இடதுசாரிகளுக்கும் கோபம் வருகிறது. இதை செய்தால் தமிழக அரசு பாஜகவிற்கு அடிபணிந்து செல்வதாகவும், கல்வி காவிமயமாக்கப்படுவதாகவும் என கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறது திமுக.

திமுக மற்றும் மற்ற எதிர்கட்சிகளின் இரட்டை வேடத்தை மேற்கண்ட உண்மைகள் உரக்கச்சொல்கின்றன.