×

வேண்டாம் எஸ்.சி. பட்டம்… மீண்டும் முழக்கம்! #RemoveUsFromScheduleCaste

தேவேந்திர குல வேளாளர் மக்களை SC பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தி புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியின் தலைமையில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவேந்திர குல வேளாளர்களுக்கு தலித் என்ற முத்திரை வேண்டாம். scheduled caste இட ஒதுக்கீடு வேண்டாம். வன்கொடுமை (PCR) வேண்டாம். எங்கள் அடையாளம் போதும். உழைத்து முன்னேறிக்கொள்கிறோம். எங்களை எஸ்.சி. பட்டியலில் வைத்ததால்தான் இழிவுபடுத்துகிறார்கள். இது ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய வரலாற்று பிழை என்று சொல்லும்புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, வயலும், வயல்
 

தேவேந்திர குல வேளாளர் மக்களை SC பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தி புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியின் தலைமையில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேவேந்திர குல வேளாளர்களுக்கு தலித் என்ற முத்திரை வேண்டாம். scheduled caste இட ஒதுக்கீடு வேண்டாம். வன்கொடுமை (PCR) வேண்டாம். எங்கள் அடையாளம் போதும். உழைத்து முன்னேறிக்கொள்கிறோம்.

எங்களை எஸ்.சி. பட்டியலில் வைத்ததால்தான் இழிவுபடுத்துகிறார்கள். இது ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய வரலாற்று பிழை என்று சொல்லும்புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, வயலும், வயல் சார்ந்த பகுதிகளூம் தொன்றுதொட்டு விவசாயம் செய்த் வந்தவர்கள்தான் தேவேந்திரகுல வேளாளர்கள். பசுவை போற்றக்கூடிய மக்கள், எந்த வித தீண்டாமைகளூக்கும் ஆளானவர்கள் கிடையாது என்கிறார்.

மேலும், அரசு படையெடுப்புகளி போது இம்மக்களின் நிலங்களை பிடுங்கிக்கொண்டு கூலிகளாக்கிவிட்டனர். இம்மக்களை பட்டியல் சாதியாக சேர்துக்கொண்டதே தவறு என்கிறேன் எனச்சொல்லும் கிருஷ்ணசாமி, பட்டியல் சாதியினர், ஆதி திராவிடர், தாழ்த்தப்பட்டவர்கள் என்று குத்திய முத்திரையை எடுத்துவிடுங்கள். எங்களுடைய மரபு ரீதியான அடையாளத்தை கொடுங்கள் என்று போராட்டம் நடத்துகிறார்.

https://twitter.com/MPMMathan1/status/1346711961971507200

இந்த போராட்டத்தின் தொடர்பாக தேவேந்திர குல வேளாளர்கள், #RemoveUsFromScheduleCaste என்ற ஹேஷ்டேக்கினை டிரெண்டாக்கி வருகிறார்கள்.

https://twitter.com/MPMMathan1/status/1346712967664918530