×

“பழனிசாமிக்கு சொந்த புத்தியே இல்லீங்க” : திமுக எம்.பி. ஆ.ராசா கடும் தாக்கு!!

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எல்.சுந்தரத்திற்கு ஆதரவாக திமுக எம்.பி. ஆ.ராசா பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் அதிமுக மட்டுமல்ல திமுகவும் ஒருகாலத்தில் கூட்டணி வைத்துள்ளது என்று கூறிவருகிறார். பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தாலும் குடியுரிமை சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, பொது சிவில் சட்டம் போன்றவற்றை எதிர்த்தோம். திமுக அறிவித்த திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவருக்கு சுயபுத்தி என்பதே
 

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எல்.சுந்தரத்திற்கு ஆதரவாக திமுக எம்.பி. ஆ.ராசா பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் அதிமுக மட்டுமல்ல திமுகவும் ஒருகாலத்தில் கூட்டணி வைத்துள்ளது என்று கூறிவருகிறார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தாலும் குடியுரிமை சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, பொது சிவில் சட்டம் போன்றவற்றை எதிர்த்தோம். திமுக அறிவித்த திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவருக்கு சுயபுத்தி என்பதே இல்லை” என்றார்

ஏழை நாடுகளில் கூட பெட்ரோல் விலை 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசும் விலை குறைக்காததால் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. திமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று நாங்கள் கூறியதால் அதிமுக எதற்காக பயப்பட வேண்டும். இதை கண்டு பயந்து அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கின்றனர். அதிமுக ஆட்சியில் செய்த நல்ல விஷயம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தவற்றையெல்லாம் உடனடியாகச் செய்ததுதான். இலவச கேஸ் சிலிண்டர் ,மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை என கொடுக்கிறோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார் பழனிசாமி. அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே இதை எல்லாம் ஏன் செய்யவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.