×

4 மணி நேரத்துக்கு மேலாக தொடர் ஓட்டம்.. ‘ASIA BOOK OF RECORDS’ல் இடம் பிடித்த திமுக எம்.எல்.ஏ!

திமுக சட்டமன்ற உறுப்பினரும் சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் மேயர் சுப்பிரமணியன் விளையாட்டில் மிக்க ஆர்வம் கொண்டவர் என்றும் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்க தினமும் கடின உடற்பயிற்சி செய்வார் என்றும் கூறப்படுகிறது. அரசியலில் மட்டும் தனது கவனத்தை செலுத்தாமல் , அவ்வப்போது விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் உலக அளவில் நடந்த பல மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றிருக்கிறாராம். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதின் காரணமாக எல்லாரும் வீட்டிலேயே
 

திமுக சட்டமன்ற உறுப்பினரும் சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் மேயர் சுப்பிரமணியன் விளையாட்டில் மிக்க ஆர்வம் கொண்டவர் என்றும் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்க தினமும் கடின உடற்பயிற்சி செய்வார் என்றும் கூறப்படுகிறது. அரசியலில் மட்டும் தனது கவனத்தை செலுத்தாமல் , அவ்வப்போது விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் உலக அளவில் நடந்த பல மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றிருக்கிறாராம்.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதின் காரணமாக எல்லாரும் வீட்டிலேயே முடங்கும் சூழல் நிலவி வருகிறது. ஆனால் அதையே சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுப்பிரமணியன், தன் வீட்டின் மொட்டை மாடியில் 8 போன்ற வடிவம் கொண்ட ஓடுதளத்தை உருவாக்கிக் கொண்டு, அதில் உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்த நிலையில், மொட்டைமாடியில் உருவாக்கப்பட்டுள்ள ஓடுதளத்தில் தொடர்ந்து 4 மணி நேரம் 8 நிமிடம் 18 வினாடிகள், 1010 முறை இடை நிற்காமல் ஓடி சாதனை படைத்திருக்கிறார். மேலும்ம் இவரது சாதனையை ‘ASIA BOOK OF RECORDS’ அங்கீகரித்துள்ளது.