×

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். ஏற்கனவே கொரோனாவில் இருந்து மீண்ட விஜயகாந்த்துக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேமுதிக தரப்பில் இருந்து விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஒரு சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிக்கை
 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். ஏற்கனவே கொரோனாவில் இருந்து மீண்ட விஜயகாந்த்துக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தேமுதிக தரப்பில் இருந்து விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஒரு சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிக்கை வெளியானது. விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதை அறிந்த பிறகு தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில், மூச்சுத்திணறலுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் விஜயகாந்த்துக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.