×

இன்றுடன் ஊரடங்கு நிறைவு : புதிய தளர்வுகளை அறிவிக்கிறார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் பொதுமுடக்கம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் கூடுதல் தளர்வுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது. தமிழகத்தின் நான்காம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிகிறது. இதனிடையே முதல்வர் பழனிசாமி கடந்த 28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவின் கருத்துக்கள் அடிப்படையில் அடுத்தகட்ட தளர்வு குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது. இதில் திரையரங்குகள், மின்சார ரயில் சேவை தொடங்குவது பற்றி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன்
 

தமிழகத்தில் பொதுமுடக்கம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் கூடுதல் தளர்வுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

தமிழகத்தின் நான்காம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிகிறது. இதனிடையே முதல்வர் பழனிசாமி கடந்த 28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவின் கருத்துக்கள் அடிப்படையில் அடுத்தகட்ட தளர்வு குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது. இதில் திரையரங்குகள், மின்சார ரயில் சேவை தொடங்குவது பற்றி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை முதல்வர் பழனிசாமி இன்று வெளியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 8 மாதமாக மூடியுள்ள தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை போன்றவை மீண்டும் திறக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம். இருப்பினும் மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்காததால் சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் தொடர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.