×

திமுக இலக்கிய அணி இணைச்செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனிடையே கொரோனாவால் போடப்பட்டிருந்த ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டதால் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 1,515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்தது. அதில் சென்னையில் மட்டுமே ஒரே நாளில் 1,438 பேர் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு கடந்த சில
 

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனிடையே கொரோனாவால் போடப்பட்டிருந்த ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டதால் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 1,515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்தது. அதில் சென்னையில் மட்டுமே ஒரே நாளில் 1,438 பேர் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் இன்று திமுக இலக்கிய அணி இணைச்செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதநாள் அவர் வானகரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கொரோனாவால் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு திமுக நிர்வாகிக்கு கொரோனா உறுதியாகி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலக்கிய அணி இணைச்செயலாளரான வி.பி.கலைராஜன் தியாகராய நகர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.