×

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானார்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயம்மாள் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 93. முதல்வரின் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நல குறைவு மற்றும் முதுகுவலி காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில் தவுசாயம்மாள் இன்று நள்ளிரவு 1 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அவரது மகனும் தமிழக முதல்வருமான பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். அத்துடன் உறவினர்கள், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சிலுவம்பாளையத்தில் இன்று காலை 9
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயம்மாள் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 93.

முதல்வரின் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நல குறைவு மற்றும் முதுகுவலி காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.

இந்நிலையில் தவுசாயம்மாள் இன்று நள்ளிரவு 1 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அவரது மகனும் தமிழக முதல்வருமான பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். அத்துடன் உறவினர்கள், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சிலுவம்பாளையத்தில் இன்று காலை 9 மணியளவில் தவுசாயம்மாள் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. தனது தாயாரின் இறப்பையடுத்து, இன்று தூத்துக்குடி, நாளை கன்னியாகுமரி, விருதுநகரில் முதல்வர் பழனிசாமி மேற்கொள்ளவிருந்த ஆய்வுகளை முதல்வர் பழனிசாமி ரத்து செய்தார்.