×

Breaking News:ஹைதராபாத்தில் பரபரப்பு… பெண் மருத்துவர் பலாத்காரக் கொலை.. காமக் கொடூரர்கள் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை..!

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். தப்பியோட முயன்ற 4 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். கொலை வழக்கில் கைதான முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஐதராபாத் கால்நடை மருத்துவ ரான பிரியங்கா ரெட்டி கடந்த புதன்கிழமை இரவு தனது ஸ்கூட்டரில்
 

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். தப்பியோட முயன்ற 4 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். கொலை வழக்கில் கைதான முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஐதராபாத் கால்நடை மருத்துவ ரான பிரியங்கா ரெட்டி கடந்த புதன்கிழமை இரவு தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கூட்டு பலாத்காரம் செய்ததோடு, அவரை உயிரோடு எரித்து கொன்றது.

இது தொடர்பாக 4 பேரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்தனர். தற்போது இவர்கள் ஹைதராபாத் செஞ்சல்கூடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் மைனர்கள். 14 நாட்கள் சிறைக்காவ லில் உள்ள இவர்களை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஷாத் நகர் போலீஸார் முடிவு செய்தனர். 

அதன்படி, குற்றவாளிகள் 4 பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். இதை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகள் 4 பேரை, 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நேற்று மாலை அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து 4 பேரையும் சிறைச்சாலையில் இருந்து மகபூப் நகர் போலீஸ் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

அப்போது தப்ப முயன்றதால் போலீஸார் என்கவுன்டரில் அவர்களை சுட்டுக்கொலை செய்துள்ளனர்.